இலங்கை வேகப்பந்து வீச்சாளர் Nuwan Thushara, இலங்கை கிரிக்கெட் சபை (Sri Lanka Cricket) மீது தொடர்ந்திருந்த வழக்கை தற்போது வாபஸ் பெற்றுள்ளார். இந்த வழக்கு, அவருக்கு Indian Premier League 2026-இல் விளையாடுவதற்கான NOC (No Objection Certificate) மறுக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டது.
துஷாரா ஆரம்பத்தில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், SLC விதித்த புதிய fitness விதிமுறைகளின் அடிப்படையில் NOC மறுக்கப்பட்டது “நியாயமற்றது” என்றும், அது தனது வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் பின்னர் அவர் நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது IPL பெரும்பாலும் முன்னேறிவிட்டதால், வழக்கை தொடர்வதில் பயன் இல்லை என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த வாரம் அவர் SLC-க்கு எழுத்துப்பூர்வ மன்னிப்பு கடிதம் அனுப்பியதாகவும், வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும் ESPNcricinfo தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தனது மனுவில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை.
SLC-யின் புதிய fitness விதிமுறைகளின் படி, குறைந்தபட்ச தரநிலைகளை பூர்த்தி செய்யும் வரை அவர் தேசிய அணிக்கு தேர்வாக முடியாது.
Royal Challengers Bengaluru அணிக்காக 2025 IPL-இல் விளையாடிய துஷாரா, 2024 IPL-இல் Mumbai Indians அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
இந்த வழக்கு ஏப்ரல் 23 அன்று விசாரணைக்கு வந்தபோது, அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.